மகாவீர் ஜெயந்தி தினத்தன்று தருமபுரி மாவட்டத்தில் அனைத்து மதுக்கடைகளும் மூடல் – மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஏப்ரல், 2025

மகாவீர் ஜெயந்தி தினத்தன்று தருமபுரி மாவட்டத்தில் அனைத்து மதுக்கடைகளும் மூடல் – மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு.

தருமபுரி, ஏப்ரல் 7 –

வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL-3, FL-3A, FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள், முன்னாள் படை வீரர் மதுவிற்பனைக் கூடங்கள் என அனைத்தும் 09.04.2025 இரவு 10.00 மணி முதல் 11.04.2025 காலை 12.00 மணி வரை மூடப்படும்.


இந்தக் காலப்பகுதியில் மதுவிற்பனையை மீறி செயல்படுகிறவர்கள் அல்லது கள்ளமாக விற்பனை செய்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அமைதியாக, மரியாதையுடன் கொண்டாடும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad