Type Here to Get Search Results !

திம்மம்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்தின் ஜெர்தலால் ஊராட்சியில் உள்ள திம்மம்பட்டி காலனியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துமணிஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன், காரிமங்கலம் ஒன்றிய செயலாளர் அடிலம் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வக்கில் சந்திரசேகர், அரசு வழக்கறிஞர் முருகன், விவசாயி அணி துணை அமைப்பாளர் ஏ.வி.குமார் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் கலந்து கொண்டு 300 ஏழைகளுக்கு வேட்டி, சேலைகள் வழங்கினார். மேலும், தமிழக அரசின் முக்கிய நலத்திட்டங்களான கலைஞர் மகளிர் உதவித் தொகை, விடியல் பயணம், மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் ஆகியவற்றைப் பற்றி விளக்கி சிறப்புரையாற்றினார்.


இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன், மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் குமரன், நிர்வாகிகள் இருசன், முனியப்பன், உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies