Type Here to Get Search Results !

தருமபுரியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள் விற்பனை சந்திப்பு.


தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட அளவிலான விற்பனையாளர்கள் மற்றும் கொள்முதல் செய்பவர்களுக்கான சந்திப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்நிகழ்வு 27.03.2025 அன்று தருமபுரி, குமாரசாமி பேட்டை, செங்குந்தர் திருமண மண்டபத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்டத்தின் 10 வட்டாரங்கள், நகராட்சி மற்றும் அனைத்து பேரூராட்சிகளைச் சேர்ந்த சுயஉதவிக்குழுக்களின் சிறுதானியங்கள், சணல் பைகள், ஊறுகாய் வகைகள், மசாலா பொருட்கள், தேன், எண்ணெய் வகைகள், துணி பொருட்கள், சோப்பு மற்றும் உலர் கருவாடு போன்ற 100-ற்கும் மேற்பட்ட உற்பத்திப் பொருட்கள் இச்சந்திப்பில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.


மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்களை கொள்முதல் செய்ய விருப்பம் உள்ள வணிகர்கள், விற்பனையாளர்கள், மொத்த கொள்முதலாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெற district administration has invited interested individuals to participate in the event. இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் சுயஉதவிக்குழுக்கள் தங்கள் பொருட்களுடன் பங்கேற்கலாம். இதுகுறித்து மேலும் தகவல் பெற மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அறிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies