தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறந்த பட்டுநூற்பாளர்களுக்கு முதல்வர் ரொக்கப்பரிசு வழங்கினார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 மார்ச், 2025

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறந்த பட்டுநூற்பாளர்களுக்கு முதல்வர் ரொக்கப்பரிசு வழங்கினார்.


தமிழ்நாடு மாநில அளவில் சிறந்த பலமுனை பட்டுநூற்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், 2024-25 ஆண்டிற்கான விருதுகள் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கப்பட்டன. நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டுநூற்பாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.


தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த இரு பட்டுநூற்பாளர்கள் சிறந்த செயல்பாட்டிற்காக கவுரவிக்கப்பட்டனர். மதிகோண்பாளையத்தைச் சேர்ந்த க. பிரகாஷ் (த/பெ கமலேசன்) ரூ.1,00,000 ரொக்கப்பரிசுடன் முதல் பரிசை பெற்றார், மற்றும் ராஜகோபால்கவுண்டர் தெருவைச் சேர்ந்த வேதவள்ளி (க/பெ ஜெயன்) ரூ.75,000 பெறுபவர் எனத் தேர்வாகினார்.


இந்நிகழ்வில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு செயலாளர் வே.அமுதவள்ளி, பட்டு வளர்ச்சித்துறை இயக்குநர் கி.சாந்தி மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad