நிகழ்ச்சியில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன், பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, மாவட்ட பொருளாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வக்கில் சந்திரசேகர், அரசு வழக்கறிஞர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் கலந்து கொண்டு 250 நபர்களுக்கு அசைவ உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி தமிழக அரசின் முக்கிய திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்து தகவல் பகிர்ந்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் பி.எல்.ஆர்.ரவி, அவைத் தலைவர் ராஜாமணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜபாட் ரங்கதுரை, முன்னாள் கவுன்சிலர் முத்துசாமி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் நாகராஜன், மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் குமரன், கிளை செயலாளர் குபேந்திரன், நிர்வாகிகள் பெரியண்ணன், சாந்தமூர்த்தி, ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக