நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்டமின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் சுமதி அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில் பொதுமக்களும், விவசாயிகளும் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் வீடுகளில் சி.எப்.எல், எல் ஈ.டி பல்புகளை பயன்படுத்த வேண்டும், வெளியில் செல்லும் போது மின்விசிறி, மின்விளக்கு, ஏ.சி. ஆகியவற்றை அணைக்க மறக்க கூடாது, நட்சத்திர குறியீடு, ஐ.எஸ்.ஐ முத்திரையிட்ட மின்சாதனங்களை உபயோகிப்பதால் மின்சார பயன்பாடு குறையும், சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்கலாம் என தெரிவித்தார்.
மேலும் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் போதுமான இடைவெளி விட்டு கட்டிடங்களை கட்டுவதன் மூலம் மின் விபத்தை தவிர்க்கலாம், டி.வி.ஆண்டனா, கேபிள் ஓயர் மற்றும் சீரியல் டவர்களை மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகில் கட்ட கூடாது, மின் கம்பத்தில் கால்நடைகளை கட்டுவதோ, துணி காய வைக்கும் கம்பிகளை கட்டுவதோ கூடாது, மழைக்காலங்களில் மின்மாற்றி, மின்கம்பங்கள் அருகில் செல்வதும், ஈரமான கைகளால் ஸ்விட்ச்களை தொடுவதும் கூடாது என்பன போன்ற பாதுகாப்பு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியதுடன் விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இப்பயிற்சிக்கான சான்றிதழுடன், தென்னங்கன்று, எல்.ஈ.டி.பல்புகளை வழங்கினார்.
இந்த விழிப்புணர்வு பயிற்சி முகாமில் பாலக்கோடு, வெள்ளிசந்தை, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், பாப்பாரப்பட்டி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், மின்வாரிய உதவி பொறியாளர்கள் அருணகிரி, சேகர், விஜயகுமார், சிபி சக்கரவர்த்தி, ரமேஷ், மாதேஷ், வெங்கடேஷ், திவாகர், சத்யா மற்றும் பணியாளர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக