தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள அருள்மிகு உடனமார் தீர்த்தகிரீஸ்வரர் - வடிவாம்பிகை திருக்கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு தீர்த்தமலை புரட்சியாளர் அம்பேத்கார் வணிக வளாகம் சார்பில் பக்தர்களுக்கு மாலை அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அம்பேத்கர் திருவுப் படத் தேர் வீதியுலா சென்றது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தப் பெருவிழாவில் உற்சாகமாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வில் ராஜ்குமார், தாதை வேடியப்பன், தென்னரசு, கேசவன், டாஸ்மாக் ஆறுமுகம், துரைவளவன், ஏ.முருகன், திருப்பதி, சிவமூர்த்தி, ஐயாகண்ணு, ராமூர்த்தி, லட்சுமணன், குபேந்திரன், சங்கர், வெங்கடேசன், ஜெயசாந்த், திரிசூழம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சமூக ஆர்வலர்கள், ஊடக நண்பர்கள், சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக