வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பெயர்ப் பலகைகளை தமிழில் அமைக்கவும், இதனை உறுதிசெய்ய அரசுத் துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வணிக உரிமம் வழங்கும் போது, உள்ளாட்சி அமைப்புகள் பெயர்ப் பலகைகள் தமிழில் அமைக்கப்பட்டுள்ளதை கட்டாய நிபந்தனையாக விதிக்க வேண்டும்.
பெயர்ப் பலகைகளை தமிழில் அமைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. சிறு, நடுத்தர மற்றும் பெரிய வணிக நிறுவனங்களுக்கு தண்டனைக் கட்டணம் தனித்தனியாக நிர்ணயிக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெயர்ப் பலகைகள் தமிழில் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தப்படும். இது குறித்து தனி குழுவினரால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் படி, பெயர்ப் பலகைகளை தமிழில் அமைக்காத நிறுவனங்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். பெயர்ப் பலகைகளை தமிழில் அமைப்பது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்த அரசுத்துறை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ்மொழி கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நேரடி நியமனப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழித் தேர்வில் கட்டாயத் தேர்ச்சி பெற வேண்டும். தமிழ்நாடு ஆட்சிமொழி சட்டம் 1956ன் செயலாக்கத்தை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு தக்க பணிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த புதிய அறிவுறுத்தல்களின் மூலம் தமிழ்மொழியின் உரிமையையும் மதிப்பையும் மேம்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாடு உறுதி செய்யப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக