Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது - மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு.


தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை ஊராட்சி, அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டார்.


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ், சென்னை அரசுத் தேர்வுகள் துறையால் நடப்புக் கல்வியாண்டில் (2024-25) இடைநிலை பத்தாம் வகுப்பு (10-ஆம் வகுப்பு) அரசு பொதுத்தேர்வுகள் இன்று (28.03.2025) தொடங்கி, வருகின்ற 15.04.2025 வரை தமிழகம் முழுவதும் நடைபெறுகின்றன.


தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 318 பள்ளிகளைச் சேர்ந்த 23,788 மாணவ, மாணவியர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வில் 1965 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள், 102 முதன்மை கண்காணிப்பாளர்கள், 102 துறை அலுவலர்கள், 102 பறக்கும் படைகள் உள்ளிட்ட மொத்தம் 2476 அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மாணவர்கள் அச்சமின்றி, மகிழ்ச்சியுடன் தேர்வு எழுத மாவட்ட நிர்வாகம் முழுமையான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும், தேர்வின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மையை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies