Type Here to Get Search Results !

பாலக்கோடு அரசு கலைக் கல்லூரியில் இலவச பொது மருத்துவ முகாம் – மாணவர்கள் பங்கேற்பு.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் தீர்த்தலிங்கம், துணை முதல்வர் சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


முகாமில் மருத்துவர் இளந்தமிழன், மருத்துவர் இளங்கோ, மருத்துவர் அனந்தஜோதி, மருத்துவர் கார்த்திக், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளவரசு, மருத்துவமில்லா மேற்பார்வையாளர் நரசிம்மராஜ் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.


காது, மூக்கு, தொண்டை பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை, நுரையீரல் பரிசோதனை, சளி பரிசோதனை, கொலஸ்ட்ரால் அளவு, சிறுநீரகம், இருதயம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறைபாடு உடையவர்களை கண்டறிந்து, அவர்கள் தேவையான மருந்துகள் மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும், உயர் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு உரிய மருத்துவ பரிந்துரை வழங்கப்பட்டது.


முகாமில் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies