புறநோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு மையம், மருந்தகம், தீவிர சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, இயல்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம், பெண்கள் நலப்பிரிவு, மயக்கவியல் பிரிவு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். நோயாளிகள் பதிவு செய்யும் பிரிவில் கணினி மூலம் விவரங்கள் பதிவு செய்யும் முறை குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவ அலுவலர்களிடம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் விசாரித்தார்.
நோயாளிகளின் உதவியாளர்கள் காத்திருக்கும் இடத்தைப் பார்வையிட்ட அவர், அவர்களுக்கு உரிய இருக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், சிகிச்சைக்கு வருவோரின் நலனுக்காக மருத்துவமனை வளாகத்தில் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். மருத்துவமனையை தூய்மையாக பராமரித்தல், குடிநீர், மின்சாரம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை சரியாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.
நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அதன் தரம் குறித்து ஆய்வு செய்த ஆட்சித்தலைவர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் நோயாளிகளை அன்புடனும் ஆதரவுடனும் அணுகி, உரிய சிகிச்சைகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் (பொறுப்பு) மரு. சிவக்குமார், உள்ளிருப்பு மருத்துவர் மரு. நாகேந்திரன், மரு. பானுரேகா, குழந்தைகள் நல மருத்துவர்கள் மரு. ரமேஷ்பாபு, மரு. பாலாஜி உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
இந்த ஆய்வு, மாவட்ட நிர்வாகம் மருத்துவ சேவைகளை மேம்படுத்தவும், நோயாளிகளுக்கு சுத்தமான மற்றும் சிறந்த சூழலை உறுதி செய்யவும் உறுதிபூண்டுள்ளதை எடுத்துக்காட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக