மாவட்டத்தில் திமுகவில் உட்கட்சி மோதல் தொடர்ந்து எழுந்து வருகிறது. நான்கு ஆண்டுகளாக அமைச்சர் பொறுப்பில் இருந்தபோதும் மாவட்டத்தில் எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் உரிய தொடர்பு இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், கட்சியினரிடையே எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கும் அவரது உதவியாளருக்கும் எதிராக எதிர்ப்பு உருவாகி, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் வெளிப்பட்டன.
இதனையடுத்து, கிழக்கு மாவட்ட விவசாய பிரிவு துணை அமைப்பாளர் துரைராஜ், பொறியாளர் அணி அமைப்பாளர் பூம்புகார் சின்னசாமி, விவசாய அணி துணை அமைப்பாளர் எவரெஸ்ட் மாதையன் உள்ளிட்டோர் விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.
இச்சம்பவம், திமுக கட்சிக்குள் நிலவும் உட்கட்சி மோதலை வெளிப்படுத்தியுள்ளதோடு, அமைச்சரின் செயல்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. "மாவட்ட வளர்ச்சிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நிர்வாகிகளை மதிக்காமல் செயல்படும் அமைச்சர் மற்றும் அவரது உதவியாளரை மாற்ற வேண்டும்" என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக