பி.செட்டிஅள்ளியில் ரூ.7.82 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பல் நோக்கு கட்டிடம் – முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமி பூஜை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 மார்ச், 2025

பி.செட்டிஅள்ளியில் ரூ.7.82 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பல் நோக்கு கட்டிடம் – முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமி பூஜை.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பி.செட்டி அள்ளி கிராமத்தில் ரூ.7.82 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பல் நோக்கு கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.


பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு, சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7.82 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கிராமத்தில் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய பல் நோக்கு கட்டிடம் கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்கான தொடக்க விழாவாக முன்னாள் அமைச்சர் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.


இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் வக்கில் செந்தில், கோபால், நகர செயலாளர் ராஜா, பேரூராட்சி கவுன்சிலர் விமலன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கிராம மக்கள் தங்கள் இடத்தில் ஒரு பொதுப்பயன்பாட்டு கட்டிடம் அமைக்கப்படும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தனர்.


இதில் அதிமுக நிர்வாகிகள் புதூர் சுப்ரமணி, ராஜா, அசோக் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள், ஊர் கவுண்டர், மந்திரி கவுண்டர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad