பேரறிஞர் அண்ணாவின் 56 வது நினைவுதினம் அனுசரிப்பு: அனைத்து கட்சியினர் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தருமபுரி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணாவின் 56 வது நினைதினம் அனுசரிப்பு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர், இதன் ஒரு பகுதியாக தருமபுரி நான்கு ரோட்டில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் முழு உருவ சிலைக்கு திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட கட்சினர் அமைதி பேரணியாக வந்து பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட திமுக சார்பில் தடங்கம் சுப்பிரமணி தலைமையிலும், அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் kp அன்பழகன் தலைமையில் மற்றும் மதிமுக சார்பில் ராமதாஸ் தலைமையில் மவுண ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக