Type Here to Get Search Results !

மை தருமபுரி அமரர் சேவை மூலம் ரயிலில் அடிபட்டு இறந்த வாலிபரின் புனித உடல் நல்லடக்கம்.


தருமபுரி மாவட்டம் மொரப்பூர் புட்டிரெட்டிப்பட்டி இருப்புப் பாதை காவல் நிலை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இவரை பற்றி விசாரித்ததில் எந்த ஒரு தகவலும் இருப்புப் பாதை காவலர்களுக்கு கிடைக்கவில்லை. இவரது பிரேதத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து நல்லடக்கம் செய்யப்பட்டது. 


இதில் மொரப்பூர் இருப்பு நிலைய காவலர் சபரிநாதன், மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், ஜெயசூர்யா ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 126 ஆதரவற்று இறந்த புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies