Type Here to Get Search Results !

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 2J ன் படி நூலஹள்ளி உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் கள ஆய்வு செய்த தன்னார்வலர்கள்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 2J ன் படி களாய்வு தருமபுரி மாவட்டம் நூலஹள்ளி கிராமத்தில் உள்ள உதவி மின் பொறியாளர் (வடக்கு) பிரிவு அலுவலகத்தில் 27-01-2025 இன்று தருமபுரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பாக களாய்வு செய்யப்பட்டது. 


இந்த களாய்வில் தேவையான பதிவேடுகளை சரி பார்த்து நகல்கள் எடுக்கப்பட்டு அந்த நகல்களில் உதவி மின் பொறியாளரால் சான்றோப்பமிட்டு வழங்கப்பட்டது. இந்த களாய்வு தருமபுரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பா.கணேஷ்.M.sc., தலைமையில் நடைபெற்றது. 


இதில் மாவட்ட செயலாளர் S.P.நாகராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் வாசுகிநாதன், மாவட்ட இளைஞரணி செயலாளர் M.முனிராஜ், மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் R.விஜயகுமார், காரியமங்கலம் ஒன்றிய செயலாளர் S.P.தேவன், லட்சுமி நாராயணன், சக்கரவர்த்தி ஆகியோர் இந்த களாய்வில் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884