Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே கிராமத்திற்குள் புகுந்த 2 யானைகள் விரட்டியடிப்பு.


பாலக்கோடு அருகே ஈச்சம்பள்ளம் கிராம பகுதியில் புகுந்த 2 யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர்.


பாலக்கோடு அருகே பெல்ரம்பட்டி, ஈச்சம்பள்ளம் கிராம பகுதிக்கு நேற்று 2 யானைகள் திடீரென வந்தது. அங்குள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த, பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானை நடமாட்டத்தை கண்காணித்தனர். பின்னர் யானை நின்ற இடங்களை சுற்றியுள்ள கிராமங்களில், வனத்துறையினர் எச்சரிக்கை செய்தனர். 


பின்னர் யானையை பாதுகாப்புடன் பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். நேற்றுமாலை ஈச்சம்பள்ளம் வனப்பகுதிக்குள் யானையை விரட்டினர். இதனால் கிராமமக்கள் நிம்மதி அடைந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies