Type Here to Get Search Results !

தருமபுரி மற்றும் சோலைக்கொட்டாய் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி – மின்தடை அறிவிப்பு.


தருமபுரி, டிச. 25:

தருமபுரி கோட்டத்திற்கு உட்பட்ட தருமபுரி 110/33–11 கிலோவோல்ட் துணைமின் நிலையம் மற்றும் சோலைக்கொட்டாய் 33/11 கிலோவோல்ட் துணைமின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், 26.12.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்வாரியம் (TANGEDCO) அறிவித்துள்ளது.


இந்த பராமரிப்பு பணியின் காரணமாக, மேற்கண்ட துணைமின் நிலையங்களின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வரும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மின்தடை ஏற்படும் பகுதிகள்: மதிகோன்பாளையம், ரெட்டிஅள்ளி, நூலதுள்ளி, கோட்டை, விஜி பானையம், குமார், தருமபுரி பேருந்து நிலையம், செப் கரை, சோலைக்கொட்டாய், கடைவீதி, நீலாபுரம், மூக்கனூர், அள்ளசாவம், வெள்ளோலை, கொட்டாலூர், விருபாட்சிபுரம், கோம்பை, மாரவாடி, ஆளே தருமபுரி, கொல்லஅள்ளி, செம்மாண்டகுப்பம், கடகத்தூர், கொளகத்தூர், குளியனூர், நாயக்கனஅள்ளி, குண்டல்பட்டி, மொடக்கேரி, நேதாஜி பைபாஸ் சாலை, கஜெட்டினள்ளி, முக்கல் நாயக்கன்பட்டி, இரயில் நிலையப் பகுதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள்.

மக்கள் நலன் கருதி நடைபெறும் இந்த பராமரிப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும், பணிகள் நிறைவடைந்ததும் வழக்கம்போல் மின்விநியோகம் வழங்கப்படும் என்றும் தருமபுரி கோட்ட செயற்பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies