Type Here to Get Search Results !

திருவாடுதுறை ஆதினம் 24 ஆவது குருமகாசந்நிதானம் சார்பாக சிறந்த சமுதாய சேவகர் விருது பெற்ற மை தருமபுரி சேவை அமைப்பினர்.


தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் மை தருமபுரி அமைப்பினர் தினந்தோறும் செய்து வருகின்றனர். அரசு மருத்துவமனையில் தினந்தோறும் உணவு சேவை, ஆதரவற்று இறந்த புனித உடல்கள் நல்லடக்கம், அவசர இரத்ததான உதவி, பேரிடர் கால உதவிகள் என எண்ணற்ற சேவைகளை தருமபுரி மாவட்டமல்லாமல் பிற‌ மாவட்டங்கள், மாநிலங்கிளிலும் செய்து வருகின்றனர். 


இவர்களது சேவைகளை பாராட்டும் விதமாக காங்கேயத்தில் நடைபெற்ற எண்ணங்களின் சங்கமம் 20ஆம் ஆண்டு விழாவில் திருவாடுதுறை ஆதினம் 24 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மை தருமபுரி அமைப்பிற்கு சிறந்த சமுதாய சேவகர் எனும் விருது வழங்கி வாழ்த்தி அருளினார். 


இது குறித்து மை தருமபுரிஅமைப்பின் தலைவர் சதீஷ்குமார் ராஜா கூறுகையில், மை தருமபுரி அமைப்பின் சேவைகளை என்றென்றும் ஊக்குவித்து வரும் எண்ணங்களின் சங்கமம் தலைவர் மாமனிதர் பிரபாகரன், மை தருமபுரி அமைப்பின் கௌரவத் தலைவர் CKM ரமேஷ் ஆகியோருக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். சிறந்த சமுதாய சேவகர் விருதை தஞ்சாவூர்  ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் அவர்கள் வழங்கினார்‌ என கூறினார்.


இந்த நிகழ்வில் மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர்கள் அருணாசலம், கிருஷ்ணன், செந்தில், சண்முகம், அருள்மணி, மூர்த்தி, ஜெயசூர்யா, சையத் ஜாபர், குணசீலன், கணேஷ், கோகுல்ராஜ் ஆகியோர் விருதினை பெற்றுக் கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies