Type Here to Get Search Results !

ஆதி பவுண்டேஷன் அறிமுக விழா; ஜி.கே.மணி பங்கேற்பு.


தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த பள்ளப்பட்டி சேர்ந்த ஆதிமூலம், 44, கடந்த, 20 ஆண்டுகளாக ரத்ததான முகாம், மரக்கன்று நடுதல், மருத்துவ முகாம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு சேவைகள்  செய்துவந்தார். இதில், ஆதிமூலம், 63 முறை ரத்த தானம் செய்துள்ளார். 


மேலும், 64 முகாம்கள் மூலம், 4,000 யூனிட்  மற்றும் தினசரி ரத்த தானத்தில் 7,000 யூனிட் ரத்தம் ரத்த வங்கியில் வழங்கியுள்ளார்.  அரசு தொடர்பான திட்டங்கள் மற்றும் தனியார் அமைப்பு மூலம் தொடர்ந்து செய்து வந்தார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மாவட்டம் முழுவதும், 80 ஆயிரம் மரக்கன்றுகள் இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் நட்டு  பராமரித்து வந்து வந்துள்ளார். 


இந்த நிலையில், மருத்துவம், கல்வி சுற்றுச்சூழல், விவசாயம், பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்டவற்றை முன்னெடுக்க ஆதி பவுண்டேஷன்  அறக்கட்டளையை கடந்த, 26 அன்று தர்மபுரியில் தொடங்கினார். இதில், பென்னாகரம் பா.ம.க., எம்.எல்.ஏ., ஜி.கே.மணி ஆதி பவுண்டேஷன் லோகோவை வெளியிட்டார். குடியுரிமை மக்கள் இயக்க தலைவர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார். தர்மபுரி, பா.ம.க., எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் வாழ்த்துரை வழங்கினார். 


இதில், டி.என்.சி., குழும தலைவர் DNC மணிவண்ணன், எஸ்.எஸ்.எஸ்., ஜுவல்லரி சக்திவேல், டி.என்.சி.,சிட்ஸ் நிர்வாக இயக்குனர் விவேகானந்தன், கண்தான மைய தலைவர் மாணிக்கம்,  தே.மு.தி.க., கிழக்கு மாவட்ட செயலாளர், ஜெயம் சமுதாய வளமையம் கென்னடி, பா.ம.க., மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி,  மாநிலத் துணைத் தலைவர் சாந்தமூர்த்தி, மருத்துவர் அசோக்குமார், பழனி மற்றும் ஆசிரியர் இளங்கோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பசுமை ஆசிரியர் சங்கர் நன்றி கூறினார். 


இந்த விழாவிற்கான சிறப்பான ஏற்பாடுகளை  ஆதி பவுண்டேஷன் நிர்வாகிகள் செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884