Type Here to Get Search Results !

பன்னிஅள்ளி கிராமத்தில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.


தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த பன்னிஅள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி  அண்ணாமலை இவரது மனைவி விஜயா (வயது.55) இவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு வீட்டில் துணி துவைத்து கொண்டிருந்தார், கடந்த வாரம் பெய்த கன மழையில் பலவீனமாக இருந்த இவரின் ஓட்டு வீடு திடிரென இடிந்து விஜயா மீது விழுந்தது, இதில் பலத்த காயமடைந்த  விஜயாவை அக்கம் பக்கத்தினர்  மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி விஜயா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies