Type Here to Get Search Results !

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் உள்துறை அமைச்சர்  அமித்ஷா பதவி விலக கோரி கண்டன ஆர்ப்பாட்டம் மாநில துணை செயலாளர்  இராசகோபால் தலைமையில்  நடைபெற்றது.


ஆர்பாட்டத்திற்க்கு தொழிலாளர் பிரிவு நிர்வாகி திருப்பதி, ஒன்றிய செயலாளர் செல்லன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தும் வகையில்  பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகவும், பகிரங்கமாக இந்தியா மக்களிடம் மன்னிப்பு கேட்கவும், மேலும் அமித்ஷாவை கைது செய்ய வலியுறுத்தியும்  கோஷமிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் காரிமங்கலம் ஒன்றிய செயலாளர் முருகேசன், நிர்வாகிகள்  பாலா,  அருண், இராசுகுட்டி, முருகன், ஏழுமலை மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies