இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ கலந்து கொண்டு ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கில் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து பேருந்து நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக புரட்சி தலைவர், எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் வெங்கல திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கணபதி, சென்னப்பன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் பாலகிருஷ்ணன், புதுர் சுப்ரமணி, வீரமணி, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கோவிந்தசாமி ,தகவல் தொழில்நுட்ப மாவட்ட இணை செயலாளர் கிரிநாத், கிளை கழக செயலாளர்கள் , மேலவை பிரதிநிதிகள், கட்சி முன்னோடிகள், ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.