Type Here to Get Search Results !

தருமபுரி JCI அமைப்பின் 2025ம் ஆண்டிற்கான நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது.


உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் செயல்படுவரும் ஜூனியர் சேம்பர் இண்டர்நேஷனல் அமைப்பின் தருமபுரி பிரிவின் 2025ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ரங்கா ஹாலில் நடைபெற்றது.


நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக வெங்கடேஷ்பாபு, முத்துகுமரன், சரவணன், மண்டல முன்னாள் தலைவர் வெங்கடசுப்ரமணியம், மண்டல துணைத்தலைவர் சுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.


இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக JCI மண்டல தலைவர் JFM கலந்துகொண்டார், நடைபெற்ற நிகழ்வில் 2025ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பொறுபெற்றுக்கொண்டனர், இதில் தலைவராக பாபு அவர்களும், செயலாளராக கணேஷ் அவர்களும், பொருளாளராக பிரசாந்த் அவர்களும் பொறுபெற்றுக்கொண்டனர்.


துணை தலைவர்களாக நிரோசா (மேலாண்மை துறை), சிவகுமார் (பயிற்சி), நந்தகுமார் (சமூக முன்னேற்றம்), செம்மலை (வணிகம்), மதனகோபால் (வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்), வினோத்குமார் (மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரம்), ஞானசேகரன் (சர்வதேசம்) ஆகியோர் பொறுப்பேற்றனர்.


துறை இயக்குனர்களாக பிரசன்னா (மேலாண்மை துறை), சுரேஷ் (பயிற்சி), யுவராணி (சமூக முன்னேற்றம்), கோகுல் பிரசாந்த் (வணிகம்), சென்னையன் (வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்), வினோத்குமார் (மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரம்), அருண்குமார் (சர்வதேசம்) ஆகியோர் பொறுப்பேற்றனர்.


இந்த நிகழ்வில், JCI பெண்கள் பிரிவு தலைவி அர்ச்சனா, இளம் JCI பெண்கள் பிரிவு தலைவர் திவ்யா, இளம் JCI தலைவர் மோஹித், ஸ்ரீனிவாசன், கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ரவிக்குமார், விஜயகுமார், ஜஸோ ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884