இக்கூட்டத்திற்க்கு மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வக்கில் கோபால் தலைமை வகித்தார். இக்கூட்டத்திற்க்கு மாநில விவசாய அணி துணைத் தலைவர் சூடப்பட்டி சுப்ரமணி முன்னிலை வகித்தனர். இதில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன் கலந்து கொண்டு வாக்குசாவடி முகவர்களிடையே பேசும் போது வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் திமுக கழக ஆட்சி அமைப்பதே லட்சியமாக கொண்டு தொண்டர்கள் பணியாற்ற வேண்டும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்கள் கடுமையாக உழைத்து 40 திற்க்கு 40 தொகுதிகளை வெற்றியடைய செய்ததை போன்று, வரும் சட்டமன்ற தேர்தல் வெற்றிக்காக அயராது பாடுபட வேண்டும்.
மேலும் வரும் 16, 17, 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறும் புதிய வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கும் முகாமில் 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஹரிபிரசாத், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஏ.வி.குமார், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் கிளை செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.