Type Here to Get Search Results !

தர்மபுரியில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். அரங்கநாதன் 32-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.

 
தர்மபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவரும், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளருமான எஸ்.ஆர். வெற்றிவேல் தந்தையும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.அரங்கநாதன் 32-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி தர்மபுரி மதிகோன்பாளையம் எஸ்.ஆர் ரைஸ் மில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். மற்றும் எஸ்.ஆர். அறக்கட்டளை நிறுவனர் எஸ்.ஆர். வெற்றிவேல் தலைமை தாங்கினார். அறக்கட்டளை செயலாளர் மரகதம் வெற்றிவேல், இயக்குனர்கள் டாக்டர் வி ரேணுகாதேவி, என்ஜினியர் வி.நிரேஷ் குமார் தொழிலதிபர் பி. அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இந்த நிகழ்ச்சியில் எஸ். அரங்கநாதன் உருவப்படத்திற்கு ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நினைவு நாளையொட்டி தொழு நோயாளிகள் 200 பேருக்கு இலவச வேட்டி சேலை மற்றும் ஆண்டுதோறும் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை 10 பேருக்கு தலா ரூ.500 வழங்கப்பட்டது. முன்னதாக மதிபோன்பாளையத்தில்  உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், தொழில் அதிபர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884