Type Here to Get Search Results !

பாப்பாரப்பட்டி பகுதி திமுக வாக்குச்சாவடி முகவர் ஆலோசனைக் கூட்டம்.

தருமபுரி அடுத்த பாப்பாரப்பட்டி பகுதி திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கினார். பென்னாகரம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் வீரமணி வரவேற்றுப் பேசினார். அவைத்தலைவர் செல்வராஜ், நகர செயலாளர் சண்முகம், மாவட்ட துணை செயலாளர்கள் உமாசங்கர், ரேணுகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் பாரி வாக்குச் சாவடி முகவர்களின் பணி செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார்.  இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் செல்வராஜ், பேரூராட்சி மன்றத் தலைவர் பிருந்தா, மாவட்ட பிரதிநிதிகள் பெரியசாமி, விஜய்‌ஆனந்த், ஒன்றிய கவுன்சிலர்கள் பூங்கொடி மாதேஷ், செல்வம், நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாண்டியன், சரவணன், மருத்துவர் அணி மாவட்ட துணை தலைவர் இளஞ்செழியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிரபு  நிர்வாகிகள் ராஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வாக்குச் சாவடி முகவர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884