தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே புதிய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்கூடஅள்ளி மேம்பாலம் பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. குடிநீர் குழாய் சரி செய்ய தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலை பகுதியில் குழி தோண்டப்பட்டது.
தற்போதுவரை குழி மூடப்படாததால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும், பாலக்கோடு நகர பகுதிகளுக்கும், மாரண்டஹள்ளி, மல்லாபுரம், பெல்ரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளதால் இது குறித்து பலமுறை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு அணுகு சாலை பகுதியில் உள்ள குழியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக