இக்கூட்டத்திற்க்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன்,, காரிமங்கலம் ஒன்றிய தலைவர் ராஜா, ஒன்றிய இளைஞர் அணி தலைவர் தங்கராஜ், நகர தலைவர் சிலம்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் வரும் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து வரும் 13ம் தேதி தர்மபுரி ஜோதி மஹாலில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் திராளான தொண்டர்கள் கலந்து கொள்வது, மாநில மாநாட்டில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஒன்றிய, நகர, கிளை வாரியாக திரளான தொண்டர்கள் பங்கேற்பது, மாநாடு குறித்து அனைத்து பகுதிகளில் பிளக்ஸ் பேனர் வைப்பது உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், ரசிகர் மன்றத்தினர், இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, விவசாயி அணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட சார்பு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக