Type Here to Get Search Results !

பாலக்கோடு MGR அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு MGR அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மதுவிலக்கு அமல் பிரிவு சார்பாக போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் கலையரசி தலைமையில்  நடைப்பெற்றது.

இதில் பேசிய காவல் ஆய்வாளர் கலையரசி  அவர்கள், மாணவர்களுக்கிடையே  போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும்,போதை பொருளால் ஒரு குடும்பம் சீர் அழிவதோடு மட்டுமல்லாமல், இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகும், என்பதை பற்றியும், எடுத்துரைத்தார். மேலும் போதைபொருள் இல்லாத மாநிலமாக நமது தமிழ்நாட்டை கொண்டுவர வேண்டும்  என  தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளர் கோபி, காவல் சிறப்புஉதவி ஆய்வாளர் முருகன் தலைமை காவலர்கள்  ராணி, லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies