Type Here to Get Search Results !

சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி குருமன்ஸ் இன மக்கள் - ஒப்பாரி வைத்து பாலக்கோட்டில் ஆர்ப்பாட்டம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாசில்தார்  அலுவலகம் முன்பு தமிழ்நாடு குருமன்ஸ் பழங்குடியினர் பாதுகாப்பு சங்கம் சார்பில் சமூக பொருளாதார கணக்கெடுப்பு முறையாக நடத்த கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த கோரிக்கை ஆர்பாட்டத்திற்க்கு மாநில தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். மாநில பொதுசெயலாளர் கோவிந்தன், மாநில அதிகாரகுழு உறுப்பிணர் மாதப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தமிழக அரசு தற்போது நடத்திய சமூக பொருளாதார கணக்கெடுப்பில், பாலக்கோடு காரிமங்கலம் ஆகிய 2 ஒன்றியத்தில் உள்ள குருமன்ஸ்  இன மக்கள் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றும், பெயரளவில் ஒரு சில கிராமத்தில் மட்டுமே கணக்கெடுப்பு நடத்தி உள்ளதாகவும், பேளாரஅள்ளி, கரகத அள்ளி, வேடம்பட்டி, நீலஞ்சனூர், கோவிலூரான் கொட்டாய், சீரியம்பட்டி, பஞ்சப்பள்ளி, நாகனம்பட்டி உள்ளிட்ட 90 க்கும் மேற்பட்ட  கிராமங்களில் வசிக்கும் குருமன்ஸ் இன மக்கள் குறித்து இதுவரை முறையாக கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும், இதனால் பிள்ளைகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாகவும், எனவே உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற  வலியுறுத்தி, தங்கள் இன அடையாளமான  நெற்றியில் மஞ்சள் பூசிக் கொண்டும், கம்பளி போர்த்தி கொண்டும் ஒப்பாரி வைத்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் திம்மன், மாநில துணை பொது செயலாளர் பிரியாத் குமார், மாநில துணைத் தலைவர் கண்ணன், மாநில பொருளாளர் பச்சமுத்து வழக்கறிஞர் ரவி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies