கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியின் குழந்தை வைஷ்ணவி, குழந்தை புற்று நோயால் பாதித்து சிகிச்சையில் உள்ளார். இவருக்காக மை தருமபுரி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் முஹம்மத் உஸ்மான் ஜாபர் அவர்கள் 12 அங்குலம் கூந்தலை வளர்த்து இன்று இந்த கூந்தலை குழந்தையின் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு தட்டணுக்கள் தானம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மை தருமபுரி அமைப்பினர் பலரிடம் கூந்தல் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கூந்தல் தானமும் வழங்கி வருகின்றனர்.