நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமணன் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியில் பேசிய டி.எஸ்.பி சிந்து இளைஞர்கள் போதை பழக்கத்திற்க்க அடிமையாகி தங்களின் வாழ்க்கையை கெடுத்து கொள்வதுடன், மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படுத்துகின்றனர்.
மேலும் நடைபெறும் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களுக்கு போதை பழக்கமே முதன்மை காரணமாக உள்ளது, இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதுடன், நாட்டின் வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மாணவர்களாகிய நீங்கள் நல்ல பழக்கவழக்கங்கள் ஒழுக்கங்களுடன் போதை இல்லா சமுதாயம் அமைக்க பாடுபட வேண்டும், என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதனை தொடர்ந்து போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன், நான் போதைப் பழக்கத்திற்க்கு ஆளாகமாட்டேன், போதை பழக்கத்திற்க்கு அடிமையானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்தி போதை இல்லா சமுதாயம் படைப்பேன் என மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் கோகுல், முனிராஜ் மணி பள்ளி மானவர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

