தர்மபுரி மாவட்டம், மகேந்திர மங்கலம் அடுத்த சாமன்கொல்லை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சேட்டு (வயது.32) இவரது மனைவி சத்தியம்மா இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர்.
இவர் நேற்றிரவு வேலை முடிந்து பாலக்கோட்டிலிருந்து மகேந்திரமங்கலம் நோக்கி தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார், வெள்ளிசந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த சொகுசுகார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சேட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் சேட்டுவின் உடலை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய சொகுசு கார் குறித்து விசாரித்து வருகின்றனர்.

.jpeg)