Type Here to Get Search Results !

பாலக்கோடு அடுத்த மாதம்பட்டியில் ஸ்ரீமஹா வாராஹி அம்மன் கோவில் 48வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மாதம்பட்டி கிராமத்தில் ஸ்ரீமஹா வாராஹி அம்மன்  கோவில் கும்பாபிஷேக விழா கடந்த ஜூலை 10 ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது, அதனை தொடர்ந்து 47 நாட்கள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன.

ஆகஸ்ட் 27ம் தேதி இன்று 48 ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மண்டல பூஜையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே திருப்பள்ளியெழுச்சி, மங்களஇசை, திருச்சுற்றுக் கலசநீராட்டு,  ஆனைந்தாட்டல், காப்பணிவித்தல், நான்காம் காலவேள்வி, பேரொளி, அக்னி வழிபாட்டுடன் பூர்ணாஹதி நடந்தது.

இதனையடுத்து    ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் பல்வேறு திரவியங்களால்  அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு  மகா தீபாரதனை காட்டப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 


இந்தவிழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies