Type Here to Get Search Results !

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக (Mass Anti-Drug Awareness campaign) சென்னை பல்கலைகழகத்தில் நடைபெற்றது.


தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று ஏற்கப்பட்டது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக (Mass Anti-Drug Awareness campaign) சென்னை பல்கலைகழகத்தில் நடைபெற்றதை தொடர்ந்து,  தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (12.08.2024) ஏற்கப்பட்டது.


போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியான ”போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்” என்ற உறுதிமொழியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சியில் வாசிக்க கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுகொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.எஸ்.மகேஸ்வரன், பென்னாகரம் திரு.ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, மண்டல இணை இயக்குநர் கல்வியல் கல்லூரி திருமதி.சிந்தியா செல்வி, உதவி ஆணையர் (ஆயம்) திருமதி.நர்மதா, கல்லூரி முதல்வர் திரு.கண்ணன், நாட்டுப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies