Type Here to Get Search Results !

தர்மபுரி பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய வளாகத்தில் ஆங்கிலத் துறை சார்பாக சிறப்பு சொற்பொழிவு.


தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு  மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத்துறையின் சார்பாக சிறப்பு சொற்பொழிவு நடத்தப்பட்டது. 


இதில் வேலூர், வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி,  சார்ந்த ஆங்கிலத் துறை பேராசிரியை முனைவர் புவனேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'Research Ethics' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் ஆராய்ச்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய கூறுகள் பற்றியும் சிறப்பான  ஆராய்ச்சி கட்டுரைகள் எழுவது பற்றின முக்கிய வழிகள் பற்றியும்  விரிவாக எடுத்துரைத்தார். 


முன்னதாக ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரை ஆற்றினார். தொடர்ந்து நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் கோவிந்தராஜ், துவக்க உரையாற்றினார். 


உதவி பேராசிரியை கிருத்திகா  வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக நிகழ்வுக்கு வந்த அனைவரையும் இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி. செந்தாமரை வரவேற்று பேசினார். இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி. சோபியா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.  இறுதியாக முதலாம் ஆண்டு  மாணவி செல்வி மோனிகா நன்றியுரை வழங்கினார். 


நிகழ்வுக்கான ஏற்பாடுகளை துறை கௌரவ விரிவுரையாளர்கள், ஆராய்ச்சி மாணாக்கர்கள் மற்றும் மாணவ மாணவியர் செய்திருந்தனர். இந்நிகழ்வை முதலாம் ஆண்டு மாணவி காவியா தொகுத்து வழங்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies