Type Here to Get Search Results !

பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் குழந்தைகள் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.


இக்கூட்டத்திற்க்கு பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி முன்னிலை வகிதார். இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜெயசீலன் கலந்து கொண்டு, குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசியதாவது, இளவயது திருமணங்கள் நடைபெறுவதால் சிறு வயதிலேயே கர்ப்பம்தரிக்கும் சூழல் ஏற்பட்டு சிறுமியின் உயிருக்கு  ஆபத்தை ஏற்படுத்துகிறது. பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற குழந்தைகளை  முறையாக பராமரிக்க வேண்டும், பாலின சீன்டல்களிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.


மேலும்செல்போன் உபயோகிப்பதை கட்டுப்படுத்துவதுடன், தேவையற்ற காட்சிகள் பார்க்காதவாறு கண்காணிக்க வேண்டும் என பேசியவர்  குழந்தைகள்  மீது யாரேனும்  வன்முறையில் ஈடுபடுவது தெரிய வந்தால் 1098 மற்றும் 14417 ஆகிய தொலைபேசி  எண்களில் தெரிவித்து குழந்தைகளின்  பாதுகாப்பிற்க்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


இக்கூட்டத்தில்  மகளிர் சுயஉதவி குழு உறுப்பிணர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள், காவல்துறை, சுகாதாரதுறை, பேரூராட்சி அலுவலர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies