இந்நிகழ்வில் மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா. கோவிந்த் தலைமை வகித்தார். குழுமத்தின் செயலாளர் திருமதி.காயத்ரி கோவிந்த் அவர்கள் முன்னிலை வகித்தார். ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் .சி. பரஞ்சோதி மற்றும் மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் , நா.மகேந்திரன் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக ஆவிச்சி கிருஷ்ணன், மேலாண்மை இயக்குனர், சென்னை,
பிரகாஷ், கிளை மேலாளர், CSC கணினி பயிற்சி மையம், தர்மபுரி, திரு ராஜா, துணை கிளை மேலாளர், CSC கணினி பயிற்சி மையம், தர்மபுரி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ/ மாணவியர்களுக்கு Tally மென்பொருள் மற்றும் அதனை சார்ந்த தொழில் துறை வாய்ப்புகள் பற்றியும் விளக்க உரை வழங்கினர். இந்நிகழ்வில் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் துறை சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வை வணிகவியல் துறைத் தலைவர் முனைவர். அ.இம்தியாஸ் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.

