தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகேயுள்ள திகிலோடு வனப்பகுதியில் மர்ம நபர்களால் தலையில் கல்லால் தாக்கி மூளை சிதறிய நிலையில்,இருந்த ஆண் சடலத்தினை போலீஸார் கைப்பற்றினர். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மலைக்கோடி வனப்பகுதியில் அழுகிய நிலையில் சடலம் இருப்பதாக பாப்பாரப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பெயரில் பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளர் குமரவேல் தலைமையிலான போலீஸார் நிகழ்விடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இறந்த நபர் பென்னாகரம் அருகே வட்டுவன அள்ளி ஊராட்சிக்குள்பட்ட நாவனம்பட்டி பகுதியை சேர்ந்த இடும்பன் மகன் செல்வம் (34) லாரி டிரைவர் என்பதும், மர்ம நபர்களால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு மூளை சிதறி கிடப்பதாகவும், அழுகிய நிலையில் இருப்பதால் இறந்து இரண்டு நாட்களுக்கு மேலாக இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தீவிரமான வருகின்றனர்.

