Type Here to Get Search Results !

பாலக்கோடு தண்டுகாரனஅள்ளியில் சாலை விரிவாக்க பணிகளை கோட்டப்பொறியாளர் நாகராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தண்டுகாரண அள்ளியில் சாலை விரிவாக்க பணிகளை தர்மபுரி  கோட்டப் பொறியாளர் நாகராஜ் நேரில் ஆய்வு செய்தார். மாண்புமிகு நெடுஞ்சாலை துறை அமைச்சர் அவர்களின் ஆய்வு கூட்ட ஆலோசனைபடியும்,  நெடுஞ்சாலை துறை கட்டுமான மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் சசிகுமார்  அறிவுரையின் படியும் மொரப்பூர் -  மாரண்டஅள்ளி நெடுஞ்சாலையில்,  ஆரதஅள்ளி கூட்டுரோடு பகுதியில் இருந்து வெள்ளிச்சந்தை வரை இரு புறங்களில் சாலை அகலப்படுத்தும் பணியானது, தண்டுகாரனஹள்ளி சாலைப்பாது திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இப்பணிகளை, தர்மபுரி நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் நாகராஜ்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வில் சாலை பணிகள் விரைவாக முடித்து வாகன போக்குவரத்திற்கு விட வேண்டும் என்றும், மேலும் பாலக்கோடு, காரிமங்கலம் பகுதியில் விடுபட்ட சாலை பணிகளை உடனடியாக  கண்டறிந்து அதனை சீரமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


இந்த ஆய்வின் போது பாலக்கோடு உதவி கோட்ட பொறியாளர் மங்கையர்க்கரசி, உதவிபொறியாளர் ரஞ்சித்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884