Type Here to Get Search Results !

பாலக்கோடு கடைத்தெருவில் மோட்டார் சைக்கிள் மீது சொகுசு கார் மோதியதில் காய்கறி வியபாரி படுகாயம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது.36). இவர் காய்கறி வியபாரம் செய்து வருகிறார். பாலக்கோட்டிலிருந்து வீட்டிற்க்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார், பாலக்கோடு  கடைவீதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சொகுசு கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலை கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.


உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  அனுப்பி வைத்தனர். இது குறித்து பாலகிருஷ்ணன் பாலக்கோடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies