Type Here to Get Search Results !

பாலக்கோடு ஸ்ரீ மூகாம்பிகை மகளிர் கல்லூரியில் கலை விழா.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு,  மல்லுப்பட்டியில் உள்ள  ஸ்ரீ மூகாம்பிகை பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை விழா நடந்தது. கல்லூரி சேர்மன் மூகாம்பிகை கோவிந்தராஜ் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ரகுநாதன் வரவேற்றார்.


விழாவில் சிறப்பு விருந்தினராக ஸ்டாண்ட் அப் காமெடி விக்கல்ஸ் விக்ரம் மற்றும் டிஜே பாப்ஸ் பிரவீன் ஆகியோர் கலந்துகொண்டு காமெடி மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினர். 


தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், பிருத்வி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies