Type Here to Get Search Results !

பென்னாகரம் பரிசல் துறை டெண்டர், BDO வும், சேர்மன் உள்ளிட்ட கவுன்சிலர்களும், லஞ்சம் பெற்றுக் கொண்டு, முறைகேடு என புகார், ஒருவருக்கே டெண்டர் விட திட்டம்.


பென்னாகரம் அருகே உள்ள, மேட்டூர் நீர்த்தேக்கத்தை கடக்க கூடிய, ஒட்டனூர்- கோட்டையூர் பரிசல் துறைக்கான டெண்டர், இன்று ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.


இதில் நான்கு ஒப்பந்ததாரர்கள் பங்கெடுத்ததாகவும், அதில் இருவரின் ஒப்பந்தத்தை மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதித்ததாகவும், மேலும் இரண்டு போட்டியாளர்களின் ஒப்பந்த படிவத்தை துணைச் சேர்மன் மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் இணைந்து, பிடுங்கிச் சென்றதாக பாதிக்கப்பட்ட ஒப்பந்ததாரர் தகவல் தெரிவித்தார்.


ஏரியூர் ஒன்றிய குழு தலைவராக பழனிச்சாமி, துணை  தலைவராக தனபால் உள்ளிட்ட 12 கவுன்சிலர்கள் உள்ளனர். ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலராக கல்பனா பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் சேலம் மாவட்டத்தையும் இணைக்க கூடிய வகையில், மேட்டூர் நீர் தேக்கத்தை கடந்து செல்ல, ஒட்டனூர்- கோட்டையூர் இடையே பரிசல் பயணம் மூலம் பொதுமக்கள் கடந்து சென்று வருகின்றனர்.


மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த டெண்டர், இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டு, இன்று மூன்றாவது முறையாக நடைபெற்றது. இதில் பெருமாள், தேன் தமிழன், அருள், ராஜேந்திரன் என 4 ஒப்பந்ததாரர்கள் பங்கெடுக்க வந்தனர். அப்போது பெருமாள் மற்றும் தேன் தமிழன் ஆகிய இருவரின் ஒப்பந்த படிவத்தை, பேச்சு வழக்கில், துணை சேர்மன் தனபால் பிடுங்கி சென்றதாக கூறப்படுகிறது. 


இதனால் பாதிக்கப்பட்டவர்களின் ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடும் சொற்களை உபயோகித்தனர். திட்டமிட்டு இவர்கள் இருவரின் ஒப்பந்த படிவத்தை பிடுங்கி, பிழையாக, முறையான ஆவணங்கள் இல்லாதவாறு, துணை சேர்மேனே ஒப்பந்த பெட்டியில் ஒப்பந்தத்தை செலுத்தியதாக கூறி வாக்குவாதம் செய்தனர். 


ஆனால் இது குறித்து எந்த கவலையும் படாத வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா மற்றும் அலுவலர்கள். மாலை 4:30 மணிக்கு டெண்டர் பெட்டியை திறந்து, சீல் வைக்கப்பட்டிருந்த நான்கு படிவங்களை பிரித்தனர். மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று பின்பு டெண்டர் முடிவு அறிவிக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா அவர்கள் தெரிவித்தார். 


திட்டமிட்டு ஒப்பந்ததாரர்களை புறக்கணித்து, அரசுக்கு சுமார் 30 லட்சம் வரை நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் டெண்டர் நடத்தப்பட்டு இருப்பது, இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏரியூர் போலீசார் தலையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை கலந்து செல்ல வைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies