Type Here to Get Search Results !

வாழைத்தோட்டம், கிராமத்தில் புரட்சிகலைஞர் விஜயகாந்த் 72வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தேமுதிகவினர் மலர்தூவி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


தர்மபுரிமாவட்டம், பாலக்கோடு அடுத்த வாழைத் தோட்டம் கிராமத்தில் தேமுதிக நிறுவனருமான புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்த நாள் விழா தேமுதிக கிளை கழகம் சார்பில் ஒன்றிய அவைத் தலைவர் முருகன் தலைமையில்   கொண்டாட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு  தேமுதிக கிளை பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, கிளை செயலாளர்கள் சக்தி, முனியப்பன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்நிகழ்ச்சியில் தொண்டர்கள்   பட்டாசு வெடித்து, கோஷமிட்டு கட்சிகொடி ஏற்றி, விஜயகாந்த் அவர்களின் திருஉருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து  பொதுமக்களுக்கு  இனிப்புக்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் ரசிகர்கள் , தேமுதிக நிர்வாகிகள்,  தொண்டர்கள், பொதுமக்கள்  உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies