Type Here to Get Search Results !

பெரும்பாலை அருகே முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளி மாணவ மாணவிகளுடன் 78 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பெரும்பாலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆலமரத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது இந்த பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். 


இந்த நிலையில் வருடா வருடம் சுதந்திரம் தினத்தன்று கொடியேற்றி கலை நிகழ்ச்சி பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி என நடைபெறும் அதேபோல் இந்த ஆண்டு முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் மகாத்மா காந்தி, காமராஜர், அம்பேத்கர், அப்துல் கலாம், சுபாஷ் சந்திர போஸ் ஆகிய சுதந்திரப் போராட்ட  வீரர்கள்   போல வேடமிட்டு மாணவர்கள் அவர்களுடைய திறமையை வெளிப்படுத்தினர்.


பின்பு பள்ளியில் தேசிய  கொடியேற்றி மரியாதை செலுத்தினர் அதன் பின்னர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மற்றும் பெற்றோர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பரிசுப் பொருட்கள் வழங்கினர்.


இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில் வேலன் தேவராஜன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கே ஆர் ஆர் தனியார் தொண்டு நிறுவனம் உமா தர்மபுரி மாவட்ட வணிகர் சங்க தலைவர் சசிகுமார் மற்றும் மாணவ மாணவிகள்  பொதுமக்கள் முன்னாள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies