தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூர் ஒன்றியம் அண்ணாமலைப்பட்டி கிராமத்தில் Deputy Director District Youth Officer திரு. SR. விக்னேஷ் (Nehru Yuva Kendra) தருமபுரி அவர்களின் முன்னிலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்து சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவுக் கூறும் விதமாக கிராமத்திற்குள்ளாக பேரனியாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்டது.
இதில் அண்ணாமலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. செல்வி அவர்களும், ஆசிரியர்.திரு. காரத்திக் அவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

