Type Here to Get Search Results !

நூலஹள்ளி கிராம சிறப்பு கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.


சுதந்திர தின விழாவையொட்டி, தருமபுரி ஊராட்சி ஒன்றியம், நூலஹள்ளி கிராமத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.


தருமபுரி மாவட்டம், நூலஹள்ளி கிராமத்தில், பிளாஸ்டிக் இல்லா  கிராமமாகவும், தூய்மையான கிராமமாகவும் வைத்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுகொள்ளப்படுகிறது.


சுதந்திர தின விழாவையொட்டி, தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியம், நூலஹள்ளி கிராமத்தில் இன்று (15.08.2024) நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். 


மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது: சுதந்திர தினவிழா - 2024 முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் இன்று (15.08.2024) நடைபெற்றது. இக்கிராம சபைக்கூட்டத்தில், நூலஹள்ளி கிராம ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினங்கள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், இணையவழி வரி செலுத்தும் சேவை, இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதித்தல், சுய சான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல் (SELF CERTIFICATION), தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு (TNPASS), தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியம் - உயிரிப்பல்வகைமை மேலாண்மை குழு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல்  ஜீவன் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


இதில் சிறப்பு நிகழ்வாக கலைஞரின் கனவு இல்லம் திட்டம் கீழ் தனிநபர் வீடு கட்டுவதற்கு ரூபாய் 3 இலட்சத்து 50 ஆயிரம் வழங்கிட உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


சுதந்திர தினவிழா - 2024 முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் இன்று நடைபெறுகின்றது. இந்த நூலஹள்ளி ஊராட்சியில் நடைபெறுகின்ற இக்கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், தருமபுரி மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை கடைக்கோடி கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியினை மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்படுத்தி வருகின்றது. கிராமங்களின் வளர்ச்சி மிக முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில் கிராமங்களின் வளர்ச்சிக்கு அரசு செயல்படுத்தி வருகின்ற திட்டங்களை பொதுமக்களும் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். 


பொதுமக்கள் தங்கள் கிராமங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து தூய்மையாக வைத்து கொண்டால் சிறந்த ஊராட்சிக்கான விருதினை பெறும் வாய்ப்பினை அனைத்து ஊராட்சிகளும் பெறலாம். இந்த ஊராட்சியும் சிறந்த ஊராட்சிக்கான விருதினை பெறுவதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.


தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர் படிப்படியாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நீர் சேமிப்பு இன்றைய காலக்கட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் அனைவரும் அயோடின் கலந்த உப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.


இந்த கிராம சபைக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் நேரிடையாகவும், மனுக்களின் வாயிலாகவும் தெரிவித்துள்ளீர்கள். அதுகுறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நிறைவேற்றக்கூடிய அனைத்து திட்டங்களும் படிப்பாயாக நிறைவேற்றப்படும். மேலும். தகுதியான நபர்களுக்கு, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். 


கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் பள்ளி இடை நிற்றலை தவிர்த்து அனைவரும் பள்ளிக்கு செல்வதை பெற்றோர்கள் உறுதி செய்திட வேண்டும். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் சரியான நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.


மேலும், கிராமங்களின் வளர்ச்சிக்கு அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. கிராமங்களை பொதுமக்கள் தூய்மையாக வைத்துக்கொள்வதோடு, பசுமை நிறைந்த கிராமமாக உருவாக்கிட அனைவரும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து பாதுகாக்க வேண்டும். நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து, தருமபுரி மாவட்டத்தை நெகிழா இல்லா மாவட்டமாக உருவாக்குவதற்கு அனைவரும் முழுஒத்துழைப்பு நல்கிட வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார். 

 

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.கணேசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் திரு.ரவிக்குமார், தருமபுரி வட்டாட்சியர் திரு.சண்முகசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.கலைவாணி, திருமதி.சத்யா, நூலஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.பச்சையம்மாள் உட்பட அனைத்து வார்டு உறுப்பினர்கள், இதர உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies