Type Here to Get Search Results !

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.


கர்நாடகா காவேரி  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததன் காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீரானது தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது இதன் காரணமாக நேற்று முன்தினம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 45 ஆயிரம் கன அடி வரை அதிகரித்தது இந்நிலையில் கர்நாடகா காவல் நிலையப்படி பகுதியில் மழையின் அளவு குறைந்ததன் காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு நேற்று 19000 கன அடியாக குறைத்து வெளியேற்றப்பட்டது இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 42 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக குறைந்தது அதனைத் தொடர்ந்து தற்போதைய நிலவரப்படி மேலும் நீர் வரத்து குறைந்து வினாடிக்கு 19 ஆயிரம் கன அடியாக உள்ளது.

நீர்வரத்து  காரணமாக கடந்த இரு தினங்களாக பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடையானது தற்போது நீர்வரத்து குறைந்ததால் மாவட்ட நிர்வாகத்தால் நீக்கப்பட்டுள்ளது. அதேபோல் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடியானது தொடர்ந்து 29வது நாளாக நீடித்து வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies