Type Here to Get Search Results !

அமானி மல்லாபுரத்தில் சுதந்திர தின கிராமசபை கூட்டத்தில் 112 நபர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான பணி ஆணை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், அமானி மல்லாபுரம் ஊராட்சியில் சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் தலைமையில் நடைப்பெற்றது.


இக்கூட்டத்தில் ஊராட்சிமன்ற செயலாளர் பெருமாள் வரவு செலவு கணக்குகளை படித்து காட்டினர். அதனை தொடர்ந்து வீடு இல்லாத 112 நபர்களுக்கு தமிழக அரசு வழங்கும் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்  கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை தலைவர் மதிவாணன் வழங்கினார்.


இக்கிராமசபை கூட்டத்தில் துணைத் தலைவர் சரவணன்,  வார்டு உறுப்பினர்கள் முருகன்,பெருமாள், சரஸ்வதி, விக்டோரியா, அமுதா, மங்கம்மாள், முருகன், மாசிலாமணி, தீபா, வெங்கடேசன், ராதா மற்றும் வேளாண்மை துறை, மின்சாரதுறை, ஊரக உள்ளாட்சி துறை, மருத்துவ துறை  உள்ளிட்ட துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies