தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், அமானி மல்லாபுரம் ஊராட்சியில் சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் ஊராட்சிமன்ற செயலாளர் பெருமாள் வரவு செலவு கணக்குகளை படித்து காட்டினர். அதனை தொடர்ந்து வீடு இல்லாத 112 நபர்களுக்கு தமிழக அரசு வழங்கும் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை தலைவர் மதிவாணன் வழங்கினார்.
இக்கிராமசபை கூட்டத்தில் துணைத் தலைவர் சரவணன், வார்டு உறுப்பினர்கள் முருகன்,பெருமாள், சரஸ்வதி, விக்டோரியா, அமுதா, மங்கம்மாள், முருகன், மாசிலாமணி, தீபா, வெங்கடேசன், ராதா மற்றும் வேளாண்மை துறை, மின்சாரதுறை, ஊரக உள்ளாட்சி துறை, மருத்துவ துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

